பாசம் வைத்த
உறவுகள் எல்லாம்
என் கண்ணில்
கானல் நீராக!
உறவு என்ற வார்த்தைக்கு
உயிர்கொடு
உண்மை அன்பே – அந்த
உறவுக்காகவே
உயிரையும் கொடு!
பொய்யான பாசங்கள்
தடயமின்றி
புதைந்து போகும்..
உண்மை நேசம் ஒன்றே
விலைமதிக்க முடியாத
புதையலாகும்!
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
அன்பை நிரப்பிடு
உன் உயிர் கூட்டிற்குள்!
மனிதப் பிறவி ஒன்றுதான்..
மீண்டும் பிறப்பது இல்லைத்தான்..
வஞ்சனையை விட்டெறிந்து
நேர்மையை நிலை நிறுத்து...
இறந்த பின்னும் வாழுமே
அன்பெனும் அழியா சொத்து!!!
No comments:
Post a Comment