எனது வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 27, 2013

உயிரானவள்

சொந்தங்கள் பலவும் கடந்த – எனக்கு
சொர்க்கமே செல்லாமல்
சொர்க்க இன்பத்தை தந்தவள் நீ!

அன்னையைப் போற்றும் இவ்வுலகம்
பிள்ளையின் பெருமையை
சொல்ல மறந்ததேனோ?

நீயின்றி கிடைத்ததோ தாய்மை,
உன்னால் தானே எனக்கு பெருமை
அன்னை என்ற அன்பு வார்த்தைக்கு
என்னை உரியவளாக்கிய நீ
என் இளவரசியே!

மலடி எனும் மரணச் சொல்லை
நான்  செவிமடுக்கவில்யென்றால் - அது
உன்னால்தானே!

கஷ்டங்கள் வந்தபோதிலும்
உன் கலகலப்பான சிரிப்பில்;
மறந்தே போனேன் அனைத்தையும்!

சகுனம் என்ற பெயரில்
கொடூர சொல்லால் மரண வேதனை
தரும் நம் சமுகம்
பிள்ளையற்றவளுக்கு பெரிய
சகுனமல்லவா பார்க்கிறது?

அந்த
கொடிய சொல்லைக் கேட்காமல்
குதூகலத்தில்
என் உள்ளத்தைக் குளிர வைத்த
நீ...
என் சிரேஷ்ட
புதல்வி மட்டுமல்ல
என் உயிரானவளும் கூட!!!

No comments:

Post a Comment