இவ்வுலகில்
வியாபித்துள்ளவை எல்லாம்
வஞ்சனை வதனங்கள்தான்!
கஞ்சிக்கே வழியின்றி
தஞ்சம் புக இடமின்றி
நெஞ்சு சுமை கொண்ட
கூட்டம் ஒரு புறம்;!
பண திமிரில்
பொல்லாத வார்த்தைகளை
விஷமாய் கக்கும்
கூட்டம் மறுபுறம்!
ஏழைகளுக்கு உதவி
நாளைய சமூகத்தை
முன்னேற்றியதாக
பெயர் சொல்ல யார் உண்டு?
ஏழைகளை ஓலைப் பாயாக்கி
கால் துடைப்பமாக பார்க்கும்
'பெரிய மனிதர்களுக்கே'
நல்ல பேர் உண்டு!
என்று மாறும் நம்
சமூகம்
என்று ஒழியும் இந்த
ஏற்ற தாழ்வு
மாறவேண்டும் மனிதன்
மனிதநேயம் உள்ளவனாய்
மாறவேண்டும் இவ்வுலகம்
மனிதபிமானம் உள்ளதாய்!!!
வியாபித்துள்ளவை எல்லாம்
வஞ்சனை வதனங்கள்தான்!
கஞ்சிக்கே வழியின்றி
தஞ்சம் புக இடமின்றி
நெஞ்சு சுமை கொண்ட
கூட்டம் ஒரு புறம்;!
பண திமிரில்
பொல்லாத வார்த்தைகளை
விஷமாய் கக்கும்
கூட்டம் மறுபுறம்!
ஏழைகளுக்கு உதவி
நாளைய சமூகத்தை
முன்னேற்றியதாக
பெயர் சொல்ல யார் உண்டு?
ஏழைகளை ஓலைப் பாயாக்கி
கால் துடைப்பமாக பார்க்கும்
'பெரிய மனிதர்களுக்கே'
நல்ல பேர் உண்டு!
என்று மாறும் நம்
சமூகம்
என்று ஒழியும் இந்த
ஏற்ற தாழ்வு
மாறவேண்டும் மனிதன்
மனிதநேயம் உள்ளவனாய்
மாறவேண்டும் இவ்வுலகம்
மனிதபிமானம் உள்ளதாய்!!!