அன்பானவனே..
அகலாத பிரியமுடன் ஒரு கடிதம்
அழுகையுடன் வடிகின்றேன்!
அன்பின் ஆழத்தை
உன்னாலே நானும் கண்டேன்
உன் மீது மட்டுமே
நானும் அன்பு கொண்டேன்!
என் நினைவை மட்டும் - உன்
நினைவகத்தில்
நிலை நிறுத்திக்கொள்;ளும்
உனக்கே இம்மடல்!
என்ன செய்கிறாய்?
எப்போது வருவாய்?
என்றெல்லாம் என்
மனசு இடைவிடாமல்
கேள்வி கேட்கின்றது!
என்ன சொல்லச் சொல்கிறாய்
என் மனதிற்கு?
சீக்கிரமாக பதில் தா
மடலாக அல்ல
உன் தரிசனத்தால்!
No comments:
Post a Comment