எனது வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 4, 2013

தரிசனம்


அன்பானவனே..
அகலாத பிரியமுடன் ஒரு கடிதம்
அழுகையுடன் வடிகின்றேன்!

அன்பின் ஆழத்தை
உன்னாலே நானும் கண்டேன்
உன் மீது மட்டுமே
நானும் அன்பு கொண்டேன்!

என் நினைவை மட்டும் - உன்
நினைவகத்தில்
நிலை நிறுத்திக்கொள்;ளும்
உனக்கே இம்மடல்!

என்ன செய்கிறாய்?
எப்போது வருவாய்?
என்றெல்லாம் என்
மனசு இடைவிடாமல்
கேள்வி கேட்கின்றது!

என்ன சொல்லச் சொல்கிறாய்
என் மனதிற்கு?

சீக்கிரமாக பதில் தா
மடலாக அல்ல
உன் தரிசனத்தால்!

No comments:

Post a Comment