எனது வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 4, 2013

விஷம்

நாட்களும் நமக்கு
பாடம் நடத்தத் தவறவில்லை..
அவற்றை நாம் தான்
அனுபவமாக்க முயலவில்லை!

நம்பினோர் எல்லாமே
நமக்கெதிரியாய் மாறுகின்றனர்..
பாசத்தைக்கூட
விஷ வேஷமாய் தூவுகின்றனர்!

கொடுபாவிகள் உணரவில்லை
அதை
நானறிவேன் என்று!

நன்றி கெட்டவரை
நண்பராக்கினாலும்
நயவஞ்சகம் கொண்டு
நல்லவன்போல் நடிப்பவரை
நண்பனாக்காதே!

பாம்புக்கு கூட
பல்லில் மட்டும்தான் விஷம்
நயவஞ்சகம் கொண்ட மனிதனுக்கோ
உடலெங்கும் விஷமடி!

நம்பி விடாதே
இந்த மனிதப் பாம்புகளை..
விஷத்தையே உன் மீது ஊற்றி
விஷப் பிணமாக்கி விடுவார்கள் உன்னை!!!

No comments:

Post a Comment