என்னருகே எவர் வந்தாலும்
உன் முகம்
வாடுவதை நானறிவேன்!
மனதுக்குள் அவர்களை
திட்டித் தீர்க்கிறாய்
என்பதையும் நானறிவேன்!
உன்
தூய்மையான பாசத்தையும்
நானறிவேன்!
உன்னைத் தவிர
என் பாசத்தை - நான்
எவரிடமும் பகிரக்கூடாதென்று
உன் உள் மனது
மெல்ல உச்சரிப்பதையும்
நானறிவேன்!
இவையனைத்தையும்
அறிந்த நான்...
மற்றவர்கள் அனைவரும்
சந்தர்ப்பவாதிகள்
என்பதை மட்டும்
அறியேன் என்று நினைத்தாயா?
அனைத்தும் நான் அறிவேன்!
அவர்களின் பாசம்
பொய்யென்று மட்டுமல்ல
உரிமையோடு நீ கொண்டுள்ள
பாசம் தூய்மையானது
என்பதையும் கூட!!!
No comments:
Post a Comment