'என்னை உனக்குப் பிடிக்குமா?'
என்று கேட்டாயே ஒரு கேள்வி
அமுத விஷம் போல!
உன்னை ஏசுவதற்கு
வார்த்தைகள்
ஏராளம் உண்டு..
ஆனால்
ஏசுவதற்கான வலிமை
என் மனதிற்கில்லை!
வலிக்கிறது!
இன்னுமா புரியவில்லை
உன் மேல் கொண்ட
பாசத்தை!
மனதை கல்லாக்கிக்கொண்டு
மரண வேதனையையும்
தாங்கிய வண்ணம்
ஒரே ஒரு வார்த்தை
உன்னை ஏசவேண்டும்!
'வார்த்தைகளில் விஷத்தைக்
கக்கும் நீ
எந்த இனப் பாம்படி?'
காலத்தின் கோலத்தால்
என்னையும் கவிஞனாக்கினாய்
இன்று..
உன் ஒரே வார்த்தையால்
என் இதயத்தை
சிதறிய கண்;ணாடியாக்கினாய்!!!
No comments:
Post a Comment