வருடங்கள் அழிகிறது
வயதும் கழிகிறது
வரனும் வந்து சேரவில்லை
வரதட்சனையால்
வாழ்க்கை இன்னும் மாறவில்லை!
பெண்ணை பெற்றோம் என்று
பெற்றவர்கள் எத்தனை நாள்
பின் தொடர்ந்து வருவதுண்டு?
சீதனத்தின் கொடுஞ் சீற்றத்தால்
பெண்கள் சீரழிந்து போவதுண்டு!
பெண்ணினம் பாவம் என்று
ஆணினமே அறிந்துக்கொள்
நீயும் ஒரு தாயின் மகன்
நித்தம் அதை தெரிந்துக்கொள்!
சீதனத்திற்கு சாட்டு சொல்வாய்
உன் வாரிசுகளின் சேமிப்பென்று
பெண்ணுள்ளம் வதைபடுவதை
நீயறியாய் பாவமென்று!
காசுபணம் இல்லையென்றால்
தூய கற்பும் தோற்று விடுமா
மனசாட்சியின் விசாரணையில்
உன் ஞாயம் வென்று விடுமா???
No comments:
Post a Comment