நீ இல்லாத நாட்களின் வலியை
இன்றுதான் நானறிந்தேன்!
நானும்
ஒரு சுயநலவாதி
என்றும் உணர்ந்தேன்!
எப்படியெல்லாம் இதயம் வலிக்குது
எதையுமே எதிர்பாராமல்
என்னில் பாசம் காட்டினாய்...
இன்று ஏதோ ஒரு
எதிர்பார்ப்பிலே
நானும் கவி வடிக்கிறேன் உனக்காக!
இன்று
என் முகம் சோர்ந்தும்
கண்கள் அது பாஷையில்
கண்ணீரை வடித்தும்
எனக்கெழுந்துள்ள கடுமையான
வலியை வெளிகாட்டுகிறது!
இருந்தும் அனைவரின் கண்களுக்கும்
அது அருவமாய்
தென்படுகின்றதோ என்னவோ
எவருமே
இதுவரைகேட்கவில்லை
எனக்கென்ன பிரச்சினையென்று!
என் கண்களில் சாதாரண தூசி விழுந்தாலே
தாங்காது தவித்து போகும் நீ இருந்தும்
இன்று எவருமே
இல்லாத அனாதையானேனடி!
எனக்கொரு துன்பம் வரும் போதே
உன் துணைத்தேடுகின்றேன்
அப்படியானால் நானும் ஒரு சுயநலவாதியடி!!!
No comments:
Post a Comment