எனது வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 27, 2013

அன்னை

அன்னையே
உன் சிறப்பை அறிந்தது
என் செல்ல மகளின் பிறப்பின் போதே!

வலிகளிலும் வடிந்தோடும் கண்ணீரிலும்
வேதனை தெரியவில்லை!
இன்னிசையான இசையாய்
குவா... குவா... என்ற
யாராலும் இயற்ற முடியாத இசை!

இந்நேரம் நான் இன்புற்ற
இந்த இசையை
அன்றொரு நாள் எனக்காக
என் தாய் பெற்றிருப்பாள்!
ஆனந்தம்மம்மா ஆனந்தம்
நானும் ஒரு பெண்ணாக பிறந்ததையெண்ணி!

வீதியோரம்
விளையாட...
நான் ஓட...
உன் விழிமேல்
என் விம்பம்
மட்டும் ஓட...
என்னையே பார்ப்பாயே!

நீ கண்டிப்பானவள் என்றெண்ணி
உன் கண்ணை கட்ட நினைத்துண்டு!

இன்றல்லவா தெரிகிறது
என் தாய் கண்டிப்பானவளல்ல
என்னை உயிர் மூச்சாய்
எண்ணியவளென்று!

நானும் ஒரு தாயானேன் - உன்
உள்ளம் நானறிந்தேன்!

என் பிள்ளை எனக்கு உயிரானாள்
உன் பிள்ளை நான்
உனக்கு உயிராவேன்
என்று நானறிவேன்!

இன்னொரு ஜென்மம்
வேண்டுமெனக்கு
உன் பிள்ளையாவதற்கு அல்ல
என் பிள்ளை நீ ஆக
உன் தாய் நானாக!!!

No comments:

Post a Comment