எனது வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, November 27, 2013

நாளைய மலையகம்

உழைத்துழைத்து
உருக்குலைந்து போனோமே
பிழைக்க வழிகளின்றி
பிணமாய் ஆனோமே!

தேயிலை, இறப்பர் நம் தேசிய
ஏற்றுமதியாம்
அதை ஏற்றுமதியாய் மாற்றும்
நாங்களோ நாட்டில்
இடம்பெயர்ந்து வந்த
இந்தியராம்!

எங்கள் உதிரத்தை
வியர்வையாய் பெறும்
தேயிலையோ
தன் சாயத்தின் நிறம் மூலம்
நன்றியளிக்குதடா!

மாடாய் உழைத்தாலும்
ஓடாய் தேய்ந்தாலும்
உழைப்பிற்கு ஏற்ற
ஊதியம் இன்றுவரை
இல்லை எமக்கு!

காலங்கள் பலவும்
கடந்தது
கஷ்டங்கள் ஒழியவில்லையே
கால் வயிறு கஞ்சிக்கு வழியில்லையே!

ஓட்டை லயங்கள்
ஒருநாள் மழைக்கே
மாட்டுத்தொழுவமாகிறது!

விலைவாசிகள் மலையானதால்
அத்தியவசியங்கள் கூட
இன்று எமக்கு
அவசியமற்றதாயிற்று!

மலையகத்தோர் மண்ணிற்காய் உழைத்து
மண்ணில் புதைபவர்கள் அல்லர்
கல்வி மாணிக்கங்களாக
நாளை மண்ணில் பிறப்பவர்கள்!

No comments:

Post a Comment